கள்ளக் காதலை மறைக்க கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்திய கொடூர கணவன்!

இந்தியாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன், மனைவியை விவாகரத்து செய்வதற்காக மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மகேஷ் கௌதம் என்பவர் ஆய்வகத்தில் ஒப்பந்த தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணத்திற்கு முன்பிருந்தே சிலவருடங்களாக தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் மகேஷ் கௌதமுக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது.

இந்நிலையில் மகேஸ் கவுதம் கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்தப் பெண்ணுடனான உறவை துண்டிக்க வேண்டும் என மனைவி வற்புறுத்தி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மகேஷ் கவுதம், மருத்துவமனையில் பணியாற்றும் காரணத்தால் அங்கு எச்ஐவி நோயாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன ஊசியை தனது மனைவிக்கு செலுத்தினார்.

கணவனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது குடும்பத்தாரின் உதவியுடன் அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் கணவன் மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் பொலிசார் கணவன் மகேஷ் கௌதம், மற்றும் அவர் பணியாற்றும் மருத்துவமனை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மகேஷ்குமார் கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *