கடனுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய மத்திய கிழக்கு நாடுகளில் அமைச்சர் கம்மன்பில!
இலங்கையில் (பெற்றோல், கேஸ் போன்ற) எரிபொருட்களை தட்டுப்பாடின்றி பெறும் நோக்கில் கடனுதவிகள் மற்றும் சலுகை அடிப்படியில் அவற்றை பெறுவதற்காக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதனடிப்படியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அபுதாபி, டுபாய் நாடுகளிலும், மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுடனும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அயல் நாடான இந்தியாவிடமும் எரிபொருளுக்கான உதவிகளை எதிர்பார்த்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.