எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்!
எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமான விடயமாக்கப்படலாம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தேவையேற்பட்டால் கொரோனா தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையினர் பொதுமக்களை தங்களின் பாதுகாப்பிற்காக இரு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் என தெரிவித்துள்ள சுகாதாரதுறை அமைச்சர் பொதுமக்களிற்கு தங்கள் வாழ்க்கை குறித்து தீர்மானிப்பதற்கான உரிமையுள்ள அதேவேளை அதேவேளை அவர்கள் கொரோனா வைரஸ்பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை எதிர்க்கின்றார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக இந்த சூழ்நிலைக்கு எவ்வாறு தீர்வை காணலாம் என நாங்கள் தீர்மானிக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.