அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் நடிகர் விஜய்யின் சுவரொட்டிகள்!

அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் நடிகர் விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள்  வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது

அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் நடிகர் விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள்  வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது  விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்து போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.இந்நிலையில் நடிகர் விஜய் இதை விரும்பவில்லை.
இந்த போக்கு தொடர்ந்தால் இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்,
சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள்/இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என  புஸ்ஸி N.ஆனந்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *