இலங்கையில் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிப்பு!
நாட்டில் தற்போது பரவும் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராயச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி ,எதிர்காலத்தில் மேலும் பல உப பிறழ்வுகள் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக குறிப்பிட்டார்.
மேலும் ,புதிய உப பிறழ்வு மற்றும் டெல்டா பிறழ்வின் செயற்பாடுகள் ஒரே விதமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.