ஜம்மியத்துல் உலமாவுக்கு சவால் விடுத்த ஞானசார தேரர்!
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா (All Ceylon Jamiyyathul Ulama) சபையானது வஹாப் வாதத்தை ஏற்றுக்கொள்கிறதா அல்லது புறக்கணிக்கிறதா என்பதை தெளிவாக கூற வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி ,கடந்த காலங்களில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பல தடவைகள் பொது இடங்களில் கேள்வி எழுப்பியிருந்த போதிலும் இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.