தூக்கில் தொங்கி துடிதுடித்த மனைவியை வீடியோ எடுத்து ரசித்த சைக்கோ கணவன்!

தற்கொலை செய்துகொண்ட மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொண்டம்மா, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பெஞ்சலையா இவர் தனியார் பேங்கில் வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தியதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்து மனைவி சந்தேகித்த கணவனிடம் தனது நடத்தையை நிரூபிக்க கணவன் கண்முன்னே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள அந்தப்பெண் முடிவு செய்தார்.

பின் அவர் தூக்கில் தொங்க கயிறை மாட்டிக் கொண்டிருந்த போது அவரது கொடூர கணவர் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். மேலும், தற்கொலையை தடுத்து நிறுத்தாமல் மனைவி துடிதுடித்து தூக்கில் தொங்கி உயிரை இழக்கும் வரை வீடியோ எடுத்த கணவன் குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *