ஒக்டோபர் முதல் வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு!

அனைத்து வாகனங்களுக்குமான மூன்றாம் தர காப்புறுதி மீதான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித் துள்ளது. இதன்படி மூன்றாம் தர காப்புறுதி (Third Party Insurance) கட்டணம் அதிகரிக்கவுள்ளது.

இதேவேளை வீதிப் பாதுகாப்பு நிதிக்கான வரியை 1 வீதத்திலிருந்து 2 வீதமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன்படி அதிகரிக்கப்பட்ட வரிக் கட்டணம் இவ்வாண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *