ஷில்பாவின் கணவரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு!
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா செல்போன் மற்றும் இதர சாதனங்களில் ரூ.9 கோடி மதிப்பிலான ஆபாச வீடியோக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வெப்சீரிஸ் எடுப்பதாக பெண்களை ஏமாற்றி ஆபாச படங்கள் எடுத்ததாகவும் இதற்காக தனியாக செல்போன் செயலி தயாரித்து ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறி சமீபத்தில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜ் குந்த்ரா மீது 1,400 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் கணவர் ராஜ் குந்த்ராவின் குற்றத்தில் ஷில்பா ஷெட்டிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது