தலைமைத்துவமே இலங்கை நாட்டின் மிகப்பெரிய வைரஸ்!
இந்த நாட்டின் மிகப் பெரிய வைரஸ் நாட்டின் தலைமைத்துவமே…
மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஏற்றும் உலகில் இந்த நாட்டில் மட்டும் அரசாங்கத்தை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. காலம் தாழ்த்தியே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. இதனால் நாடு பெரும் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
மேலும் ,நாட்டில் தற்பொழுது சீனி, பால்மா, கோதுமை மா என பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு எந்தவொரு வைரசும் வெளிநாடுகளிலிருந்தே வருகின்றது. எமது நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். கொவிட் வைரசும் வெளிநாட்டிலிருந்து வந்தது என்பதனை நான் நினைவுபடுத்துகின்றேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.