இறக்குமதி கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தளர்த்துப்படும்!

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க விரும்பவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை தளர்த்தப்படுவதைப் பார்க்க விரும்புவதாகவும், கட்டுப்பாடுகள் முதலீட்டாளர் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

Bloomberg Markets: Asia உடனான செவ்வியின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

முதலீட்டாளர்கள் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கை நிலைகளைப் பொறுத்த வரையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *