மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை அரசாங்கம் அறிவிப்பு!
பீர் வகையிலான மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட ஹோட்டல்களில் மதுபானத்தை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களில் அவற்றை தொடர்ந்து செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத்திணைக்களம் குறிப்பிடுகின்றது.