தனது 2 குழந்தைகளை காப்பாற்ற சிறுநீரை குடித்து உயிர்விட்ட தாய்!

வெனிசுலாவில், 4 நாட்களாக தனது இரண்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்ற, ஒரு தாய் தனது சொந்த சிறுநீரை குடித்து, கடைசியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், Higuerote எனும் இடத்திலிருந்து மக்கள் வசிக்காத கரீபியன் தீவான La Tortuga-விற்கு, செப்டம்பர் 3-ஆம் திகதி 9 பேர் கொண்ட ஒரு குழுவினர் தனிப்படகு ஒன்றின் மூலம் பயணித்துள்ளனர்.

அங்கிருந்து அந்த படகு, 5-ஆம் திகதி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வர திட்டமிடப்பட்டது. அதற்காக ஆண்டு இரவு 11 மணியளவில் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனால், அங்கிருந்து புறப்பட்ட அந்த படகு இலக்கை அடையத் தவறியது. உடனடியாக தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அந்த படகில், Mariely Chacon எனும் 40 வயது பெண், அவரது இரண்டு குழந்தைகள் Jose David மற்றும் Maria Beatriz Camblor Chacon, கணவர் Remis David Camblor, குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நேனி Veronica Martinez (25) மற்றும் அவர்களுடன் மேலும் 4 பேர் சென்றிருந்தனர்.

அவர்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, அந்த படகு ராட்சத அலையில் சேதமடைந்துள்ளது. அதனால் அந்த படகை இயக்கமுடியாமல் போனது.

இரண்டு நாட்களாக அவர்கள் அனைவரும் உணவு, குடிநீர் இல்லாமல், கடுமையான வெப்ப அலையினால் தாக்கப்பட்டனர்.
இந்த காலகட்டத்தில், Mariely Chacon தனது இரண்டு குழந்தைகளை மட்டுமாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்துவந்துள்ளார்.

சாப்பிடவும் குடிக்கவும் ஏதும் இல்லை என்ற நிலையில், குழந்தைகளுக்காக பால் சுரக்கவேண்டும் என்பதற்காக, Mariely வேறு வழியின்றி தனது சொந்த சிறுநீரையே குடித்துள்ளார்.

மீட்புக் குழுவினர் ஒருவழியாக செப்டம்பர் 7-ஆம் திகதி மதியம் 2.10 மணியளவில், அந்த படகை கண்டுபிடித்து அதில் இருந்தவர்களை மீட்டனர்.

ஆனால் அவர்கள் மீட்க வந்த நேரத்தில், Mariely இறந்து கிடந்தார். அவர் 3 முதல் 4 மணிநேரங்களுக்கு முன்பு தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

அந்த படகில் இருந்த Mariely-யின் சடலத்துடன் சேர்த்து, 2 குழந்தைகள் மற்றும் Veronica ஆகிய 4 பேரை மட்டுமே மீட்புக்குழுவினர் மீட்டனர். அப்போது, சூட்டை தாங்கமுடியாமல் Veronica அந்த படகில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் இருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

அந்த படகில், Mariely-யின் கணவர் Remis David Camblor, உட்பட மற்ற 5 போரையும் காணவில்லை. அவர்களை தேடும்பனியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *