அம்பாறைக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் மக்களால் விரட்டியடிப்பு!
இராஜாங்க அமைச்சரொருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு கூச்சலிட்டு விரட்டிவிடப்பட்ட சம்பவமொன்று அம்பாறையில் இடம் பெற்றுள்ளது.
வனஜீவராசிகள் இராஜாஙக அமைச்சர் விமலவீர திஸாநாயகவே இவ்வாறு பொது மக்களால் நையப்புடைக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. விவசாயிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் தான் தோன்றித்தனமாக தனது அரசியல் அதிகாரத்தைப்பயன்படுத்தி அம்பாரை ரஜவெவ பிரதேசத்தில் விவசாய நிலங்களை மறித்து மீன் குளங்களை நிர்மானித்துள்ளார்.இம்மீன் குளத்தில் உத்தியோகபூர்வமாக.மீன் குஞ்சுகளை விட வந்தே போதே அமைச்சருக்கும் இப்பிரதேச வாசிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது
இப்பிரதேசவாசிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு கூக்குரலிட்டு அமைச்சரை விரட்டியடித்துள்ளனர்.