உலகில் இருமடங்காக அதிகரித்துள்ள வெப்பநிலை!

உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் தகனமே வெப்பநிலை அதிகரிப்புக்கு 100சதவீத காரணம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சூழல் மாறுபாடு தொடர்பான நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் வைத்தியர் பெட்ரிக் ஒடோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1980 – 2009 ஆண்டு காலப்பகுதியினுள் 14 நாட்களில் மாத்திரமே 50 அல்லது அதனை அண்மித்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

எனினும், 2010 – 2019ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் 26 நாட்களில் உச்சளவான வெப்பநிலைகள் பதிவாகியுள்ளதுடன்,தற்போது, 40 நாட்கள் வரை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,தற்போது இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் 48 பாகை செல்சியஸுக்கும் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *