இலங்கையில் ஜனநாயகம் அழிவதால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது!
சர்வதேச சமூகம் முன் இலங்கை எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மோதலுடன் தொடர்புடையது அல்ல, மாறாக ஜனநாயகத்தின் அழிவு என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயகத்தை மதிக்காத மற்றும் நிலைநாட்டாத நாடாக வகைப்படுத்தப்படுவதைத் தடுக்க அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
நாகரிக உலகில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினரான இம்தியாஸ் பகீர் மார்கர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் எழுப்பப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் குடிமக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவது தொடர்பான நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் என்றும் அவர் தெரிவித்தார்.
பல அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.