உலகக் கிண்ணத்தை நாங்களே வெல்வோம் ஷகீப் அல் ஹசன் ஆரூடம்!
எதிர்வரும் ஒரு மாதத்தில் நடைபெறவுள்ள T20 உலக கிண்ணத்தை வங்க அணியே வெல்லும் என அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த T20 உலகக் கோப்பையை இந்தியா அல்லது மேற்கிந்தியதீவு அணிகளுக்கே வெல்லும் வாய்ப்பு அதிகம் என சர்வதேச கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும் கடந்த 3 போட்டி தொடர்களிலும் பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடி வெற்றியீட்டியுள்ளது. எமது அணி வீரர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருக்கிறார்கள் எனவே இதன் வெற்றிவாய்ப்பு தமக்கே சாதகமாக உள்ளதாக ஷகீப் அல்ஹசன் தெரிவித்துள்ளார்.