யாழ்ப்பாண கோயிலுக்கு நுழைந்த பொது பல சேனா!
நாட்டில் கொரோனாத் தொற்று நிலைமை நீங்க வேண்டி இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
அந்தவகையில் யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் இன்று(14) சிறப்பு யாகம் இடம்பெற்றது.
பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இப் பூஜை வழிபாட்டில் கலபொட அத்துரலிய ஞானசார தேரரும் கலந்துக்கொண்டார்.