இலங்கை மக்கள் அர்ப்பணிப்பு செய்யாமல் சிறப்புரிமைகளை கோரக் கூடாதாம்!
நாடு மற்றும் மக்கள் என்ற முறையில் தற்போதைய சந்தர்ப்பமான பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டிய நேரம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அப்படியான அர்ப்பணிப்புகளை செய்யாது பல சிறப்புரிமைகளை தற்போது கோரக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வருமானத்திற்காக வரி அறவிட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அர்தத்திலேயே கூறி இருக்கலாம் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.