கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார்!
பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் லாஸ்லியா(losliya). இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ஆவார். எதிர்பார்த்ததைப் போலவே இவர் பின்னால் ஒரு இளைஞர் பட்டாளம் படையெடுத்தது.
தற்போது லாஸ்லியா இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளாராம். அந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அரைகுறை ஆடையுடன் போட்டோ ஸூட் நடத்தியும் படவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சில நடிகைகள் லாஸ்லியாவுக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன என பொறாமையில் பொங்குகின்றனராம்.
அதற்கு காரணம் லாஸ்லியா போட்டு உள்ள முக்கிய கண்டிஷன்கள் தான். தனக்கு கதை மற்றும் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியமில்லை எனவும், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.
இதனால்தான் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்