ஐ. நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகின்றது.
இலங்கை தொடர்பில் 46ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பேரவையின் ஆணையாளர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். மறுநாள் அது தொடர்பில் விவாதம் இடம்பெறும்.