இலங்கை நாடு கடவுளின் சாபத்துக்கும்
கோபத்துக்கும் ஆளாகிவிட்டது!
இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கிய கதை எங்களுக்கு – இரண்டும்
உரைக்கின்றது-முருத்தட்டுவே தேரர் விரக்தி
நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் விரக்தியில் வாழ்கிறார்கள் பலர் விலகுகிறார்கள் இன்னும் பலர் விநோதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு பதவியேற்ற தினம் பெரும் கொண்டாட்டமாக களியாட்டமாக இருந்தது. ஆனால் இன்று நாடு மரணவீடு போல காட்சி அளிக்கிறது.
நாட்டுக்கு கடவுளின் கோபமும் சாபமும் ஏற்பட்டுவிட்டது என பொது மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள் அரசாங்கத்தின் மூலம் நாங்கள் எதிர்பார்த்தது இதுவல்ல.என குறிப்பிட்டுள்ளார்.