கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்!

கொழும்பு டி.சொய்சா மகளிர் (DMH) வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இன்று (09) காலை தாய்க்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் முடிவு செய்ததாக தெரிவித்தனர்.

இதன்மூலம் மூன்று குழந்தைகளும் பிறந்தன.
தாயும், மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *