அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பு!
அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வார்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூலை 31ஆம் தேதிக்குள் உலகம் முழுவதும் 59.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதில், 833 பேர் நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் கூறியுள்ளது. அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நரம்பு வீக்கம், தற்காலிக பக்கவாதம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுவதாகவும் ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.