கரண்டியை பயன்படுத்தி சுரங்கம் தோண்டி 6 பலஸ்தீன் கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்!
இஸ்ரேலிய சிறைச்சாலையில் இருந்து 6 பலஸ்தீனியர்கள் சுரங்கம் தோண்டி தப்பித்துச் சென்றுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.!!
இவர்கள் சுரங்கம் தோண்ட உணவு உண்ணும் கரண்டிகளை பயன்படுத்தி தப்பித்ததாக தெரிவிக்கும் செய்தி பலரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
அவர்கள் தப்பித்தார்கள் என்ற செய்தியை விட கரடுமுரடான பாறை போன்ற அந்த தரையை எவ்வாறு தோண்டினார்கள் என்பதுதான் அதிசயமான செய்தியாக பலராலும் பார்க்கப்படுகிறதாம்.