அதிகமாக நோயெதிர்ப்பு மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை!
கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை அளவிற்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவு வழங்கியுள்ளது.
அத்துடன் சமீபகாலமாக கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழப்போரில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் போதுமானளவு ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.