இலங்கை மக்களிடம் அவசர வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், முடிந்தால் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி வகையை கருத்தில் கொள்ளாமல், அருகில் உள்ள தடுப்பூசி மையத்தில் இருந்து மக்களுக்கு கொவிட் தடுப்பூசியைப் பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்றும் ஒரு நாட்டில் குடியேற எதிர்பார்க்கும் சிலர் குறிப்பிட்ட வகை தடுப்பூசிகளுக்காக காத்திருக்கின்றனர். முதலில் வாழ வேண்டும், பின்னர் இடம்பெயர்வது பற்றி சிந்திக்க வேண்டும். தடுப்பூசிகளின் வகைகளை தேர்வு செய்வது அபத்தமானது என்று அவர் கூறியுள்ளார்.