ரிஷாதின் விளக்கமறியல் 07 ஆம் திகதி வரை நீடிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதுர்தீனின் நீதிமன்ற உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 07 திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதுர்தீனை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது