பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட மனித உடல்!

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில், மீண்டும் தலிபான்களின் அட்டூழியங்கள் அரங்கேறியுள்ளதா என்ற மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க படைகளால் கைவிடப்பட்ட அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை இயக்கிய தலிபான்கள் அதில் மனித உடலை தொங்கவிட்ட நிலையில் பறந்துசென்றுள்ளனர்.

இது குறித்த காணொளிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கபடைகள் நேற்று முழுவதும் வெளியேறியது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படையினர் நேற்று அங்கிருந்து வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *