கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்!

ஆறு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்கிலா மடுவந்தி ராஜபக்ஷ என்பவர் புத்தளம் கிவுலாவைச் சேர்ந்த தாய் ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

மூன்று குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *