றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பியுள்ளது!
கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது இடப் பற்றாக்குறை நிலவுவதாக அவ் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நளின் கித்துல் வத்த தெரிவித்துள்ளார்.
தற்போது 200 சிறுவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.