இலங்கையில் ஒட்சிசன் தேவை 600 வீதத்தால் உயர்வு!
நாட்டில் ஒட்சிசன் தேவை 600 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவை 140 தொன் ஆக உயர்வடைந்துள்ளது.
இதன் காரணமாக அரசாங்கம் வாராந்தம் 300 தொன் எடையுடைய ஒட்சிசனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றது என மருந்து பொருள் உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சின் செயலாளர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக நாளாந்தம் 20 தொன் எடையுடைய ஒட்சிசன் மட்டுமே நோயாளிகளுக்காக தேவைப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.