இறந்தவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு பிள்ளைகள் செய்த சூழ்ச்சி அம்பலமானது!

தர்மபுரி மாவட்டத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு உயிரோடு இருக்கும் தந்தையை இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்களின் கீழ்த்தனமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(75). இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு தர்மபுரியில் சொந்தமாக 2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 2 வீடுகள் உள்ளது.

அந்த வீடுகளை தங்களது பெயருக்கு மாற்றி எழுதி வைக்குமாறு கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து அவரது மகன்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். ஆனால் முருகேசன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவரது மகன்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் முருகேசன் உயிருக்கு பயந்து வீட்டை வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய பெயரில் தர்மபுரி வங்கி கணக்கில் உள்ள ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை எடுக்க நேரில் சென்றுள்ளார்.

அப்போது வங்கி நிர்வாகிகள் உங்களது மகன்கள் நீங்கள் இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் காட்டி உங்களின் பணத்தை வாங்கி கொண்டு சென்றுவிட்டதாக கூறினார். அது மட்டும் இல்லாமல் அந்த இறப்பு சான்றிதழை வைத்து 2 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் அபகரித்து உள்ளனர்.

இது குறித்து அந்த முதியவர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *