18 வயதிற்கு குறைவான குழைந்தைகளை தாக்கும் மின்ஸ்க் நோயால் 4 குழந்தைகள் உயிரிழப்பு!

கேரளாவில் கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டுமே 3 நாட்களும் 30 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மிக அதிகமாக ஒரே நாளில் 32,801 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் 70 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 353 வார்டுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. எனவே இந்த வார்டுகளில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளை கேரளா முழுவதும் மும்மடங்கு முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனாவுக்கு அடுத்தப்படியாக கேரளாவில் ‘மிஸ்க்’ (மல்டிசிஸ்டம் இன்பிளமேட்டரி சின்ட்ரோம் இன் சில்ட்ரன்) என்ற நோயும் வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் கொரோனா பாதித்த 18 வயதுக்கு குறைவான குழந்தைகளைத்தான் இந்த நோய் தாக்குகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஒன்றரை வருடத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்த ேநாய் பாதித்துள்ளது. அதில் இதுவரை 4 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். மிஸ்க் நோய் பாதித்த குழந்தைகளில் 95 சதவீதம் பேரும் கொரோனா பாதித்தவர்கள் என கூறினார்.

இறந்த 4 குழந்தைகளும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தைகளுக்கு இந்த நோய் பரவியதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்த கேரள சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. மிஸ்க்கின் அறிகுறிகள் கொரோனா பாதித்த 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, 3 முதல் 4 வாரங்களில் மிஸ்க் நோய் பாதிக்கிறது. கடுமையான காய்ச்சல் தான் இந்த ேநாயின் முக்கிய அறிகுறியாகும். மேலும் ேதாலில் சிவந்த நிறத்தில் தடுப்புகள் ஏற்படும். மேலும் மெட்ராஸ் ஐ வருவது போல் கண்களில் சிவப்பு நிறம், வாய்க்குள் தடித்தல், ரத்த அழுத்தம் குறைவது உள்பட அறிகுறிகள் காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *