சுவிஸ் சிறையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த இலங்கைப் பெண்!

சுவிஸ் சிறையில் தற்கொலைக்கு முயன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் பரிதாபமாக மரணமடைந்த இலங்கைப் பெண் வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாகோஃப் சிறையில் இலங்கைப் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று, இரண்டாவது நாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு சிறை காவலர்கள் கவனக்குறைவாக கொலை செய்தாக கூறி குற்றவியல் நடவடிக்கையில் சிக்கினர்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பேஸல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் கவனக்குறைவாக கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நால்வரையும் விடுவித்துள்ளது.

நால்வரும் கடமையில் தவறியதாகவே நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. 29 வயதான இலங்கையர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் கண்காணிப்பு கெமராவில் தெரியரவர, இரவுப்பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் உட்பட நால்வர் முன்னெடுத்த துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டார். ஆனால் அந்த நால்வரும் குறித்த இலங்கையருக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உடனடியாக ஏற்பாடு செய்ய தவறியுள்ளனர்.

சுமார் 18 நிமிடங்களுக்கு பின்னரே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி இரண்டாவது நாள் மரணமடைந்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் விடுவித்துள்ள நீதிமன்றம், இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்க கூடாது எனவும், இது அரசு, நீதித்துறை மற்றும் சிறை அமைப்பின் தோல்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *