இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

நாட்டில் மேலும் 749 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று இதுவரை 4,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,961 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,371ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *