பிரித்தானியாவில் உணவுப் பற்றாக்குறை!

பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையை “இதுவரை கண்டிராத மோசமான நிலை” என ஒரு பெரிய பல்பொருள் அங்காடியின் முதலாளி எச்சரித்துள்ளார்.

கோவிட் மற்றும் ப்ரெக்ஸிட் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள ஊழியர் பிரச்சனைகள் உணவுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பல சில்லறை விற்பனையாளர்கள் பொருட்களை பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கூட்டுறவுத் தலைவர் ஸ்டீவ் முர்ரெல்ஸ், “தனது பல்பொருள் அங்காடிகள் தற்போதைய சிக்கல்களால் சில வரம்புகளை குறைக்க வேண்டியிருக்கிறது” என கூறியுள்ளார்.

டைம்ஸிடம் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை நான் எந்த நேரத்திலும் பார்த்திராத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக” கூறியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு, “பிரெக்சிட் மற்றும் கோவிட் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள்” காரணம் என்றும் ஸ்டீவ் முர்ரெல்ஸ் குற்றம் சாட்டினார்.

இங்கிலாந்தில் 4,000 கடைகளைக் கொண்ட கூட்டுறவு, “தற்போது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க லாரி ஓட்டுநர்களாக ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும்.”

கடந்த ஆண்டு சுமார் 14,000 ஐரோப்பிய லாரி ஓட்டுநர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறிய பிறகு, தற்போது 90,000  பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண்டிகை காலங்களில், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கலாம் என்று தொழில்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பிரிட்டிஷ் இறைச்சி செயலாக்க சங்கத்தின் தலைமை நிர்வாகி நிக் ஆலன், “அரசாங்கத்தின் குடிவரவு கொள்கைகள் பல நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பணியாளர் சவால்களுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.”

பிரிட்டிஷ் இறைச்சி செயலாக்க சங்க உறுப்பினர்கள், சராசரியாக சுமார் 12 வீதம் -13 வீதம் பணியாளர்களைக் குறைத்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நுகர்வோர் இறுதியில் பாதிக்கப்படுவார்கள் என பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *