இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை திடீர் உயர்வு!

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி,ஒரு கிலோ மைசூர் பருப்பு 250 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 215 ரூபாவுக்கும், ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கு 300 ரூபாவுக்கும், இந்திய உருளைக்கிழங்கு 240 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 135 ரூபாவுக்கும், சிறிய வெங்காயம் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகிறது.

மொத்த வியாபாரிகள் இவற்றிற்கான விலையை அதிகரித்துள்ளதன் காரணமாக, சீனி, கிழங்கு, வெங்காயம் மற்றும் நெத்திலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சதொசவில் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி நேற்று (25) 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதோடு, மைசூர் பருப்பு கிலோவொன்றின் விலை 250 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் சதொசவுக்கு ஒரு தொகை வெள்ளை சீனி கிடைக்கவுள்ளதாகவும், இவ்வாறு கிடைத்ததன் பின்னர் தற்போதைய விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு சீனியை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *