வயிற்றில் இருந்த ஐந்து மாத சிசு கொரோனாவால் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்து மாத சிசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.
கம்பளை வைத்தியசாலையின் சுகாதார பிரிவு இதனை அறிவித்துள்ளது.
கம்பளையைச் சேர்ந்த குறித்த பெண், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதன்போது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளது.
இதன் காரணமாக சத்திரசிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்