சீனா தயாரிப்புகளை வாங்கி ஏமாற்றமடையும் நாடுகள்!

சீனாவிடமிருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்த மிகவும் புகழ்பெற்ற சீன தயாரிப்பு கடல் ரோந்து கப்பல்களில் ஒன்று பாகிஸ்தான் கடல்சார் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது.

இந்தக் கப்பலை (பி.எம்.எஸ்.ஏ.) இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கப்பலின் செயல்பாட்டு திறன் மற்றும் சீன இராணுவ வன்பொருட்கள் மீது பாகிஸ்தான் வைத்திருந்த நம்பிக்கை என்பன இதனால்  பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளன.

சீன தயாரிப்புகளின் செயல்திறன், ஆயுள், சேவை, மற்றும் பராமரிப்;பு என்பவற்றில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் பெரும் நம்பிக்கை  வைத்திருந்ததாம். இந்த நம்பிக்கை தற்பொழுது  கேள்விக்குறியாகியுள்ளதாம் .

பி.எம்.எஸ்.எஸ் டாஸ்ட் என்னும் இந்த ரோந்துக்கப்பல் சீன கப்பல் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆறு ரோந்து கப்பல்களில் ஒன்றாகும்.

அத்துடன் இந்தக்கப்பல் சீன-பாக் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கும் சின்னமாகவும் சிறப்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பாகிஸ்தான் 150 மில்லியன் டொலருக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் இக்கப்பலின் ஆயுத அமைப்புக்கள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களில் உள்ள கடுமையான குறைபாடுகள், செயல்பாட்டு திறன்களை தீவிரமாக பாதிப்புக்கு உட்படுத்தி எதிரிகளுக்கு எதிராக கப்பலை உட்காரவைக்கும் நிலைக்குள்ளாக்கி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எதிரி கப்பலுடன் நேரடி மோதலின்போது கப்பலை பாதுகாக்க கப்பலுக்குள் உள்ள பிரதான ஆயுதமானது ஒற்றைக்குழல் 30 மிமீ அரை தானியங்கி கடற்படை துப்பாக்கியாகும். ஆனால் தற்போதைய நிலையில் அந்த துப்பாக்கி மந்தமான நிலையில் இருப்பது பல சோதனைகளில் தெரியவந்துள்ளது. பல்வேறு கடல்சார் சோதனைகளில் அது தோல்வியடைந்துள்ளது. இந்த குறைபாடுகளை சீன பொறியியலாளர்கள் இன்னும் சரிசெய்யவில்லை.

கடற்படை கப்பலின் இன்னுமொரு முக்கிய குறைபாடு அதன் தொடர்பு அமைப்பு முறையாகும். கப்பலில் இணைக்கப்பட்டுள்ள வெளி மற்றும் உள் துணை அமைப்புகள் கப்பலுக்கும் கரை கட்டளை தளத்திற்கும் மற்ற கப்பல்களுக்கும் நம்பகமான தகவல்களை வழங்கவேண்டும்.

பி.எம்.எஸ்.எஸ் டாஸ்ட் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள தொகுப்பு சில மாதங்களுக்கு முன்னர் குறைபாடுடையதாகக் காணப்பட்டது. இது சரி செய்யப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை.

அதேபோன்று போர்டில் உள்ள எச்சரிக்கை அமைப்பு குறைபாடுடையதென கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் பொது தவறு மற்றும் உள் தவறுகளை அலாரங்கள் இல்லாமல் அனுப்புகிறது. பின்னர் தானாக மீட்டு அமைக்கப்படுகிறது. இது கப்பலுக்கு ஒரு தீவிர செயல்முறை சிக்கலை உருவாக்குகிறது.

தவறான அலாரங்கள், தவறான பாதுகாப்பு உணர்வை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் வளங்களையும், நேரத்தையும் வீணாக்குகின்றன.

இன்னொரு குறைபாடு கப்பல் இயந்திரத்தில் உள்ளது. இதில் உள்ள முக்கிய இயந்திரம் சிலிண்டர். ஆனால் இந்த சிலிண்டர் எண் சரியாக பொருத்தப்படாததால் எரிபொருள் கசிகிறது. கப்பலில் வெடிப்பு ஏற்பட கசிவு ஒரு சாத்தியமான காரணம். குறிப்பாக நீரில் செயல்பாட்டின்போது நிகழலாம்.

பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளின் விமர்சனத்துக்குள்ளானது இந்தக்கப்பல் மட்டுமல்ல. 2018ஆம் ஆண்டு ஓகஸ்டில் நிர்வகிக்கப்பட்ட பி.எம்.எஸ்.எஸ் ஜோப் கப்பலும் சீன பொறியியலாளர்களால் இன்னும் சரிசெய்யப்பட முடியாமல் பல குறைபாடுகளுடன் உள்ளது.

பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மோசமான தரம், தோற்றம் போன்ற பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்னொரு சுவாரஸ்ய விடயமென்னவெனில் மலேசிய கடற்படையும் சீனாவின் தரமற்ற தயாரிப்புகளால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *