இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.35 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.25 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

  • புதிதாக 37,593 பேர் பாதித்துள்ளனர்.
  • இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,12,366 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 648 பேர் இறந்துள்ளனர்.
  • இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,35,758 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,169 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,54,281 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,22,327 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • குணமடைந்தோர் விகிதம் 97.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.99% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் இதுவரை 59,55,04,593 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *