ரிஷாத் சிறையில் இருந்து திடீரென மாற்றப்பட்டார்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், இதுவரை இருந்த சிறைக் கூடத்திலிருந்து வேறொரு சிறைக் கூடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக சிறைச்சாலைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை மருத்துவர் ஒருவரை அச்சறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பின்னணியில் அவரது சிறைக்கூட இடமாற்றமும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது