ஊரடங்கின் பெறுபேறு இரு வாரங்களில் தெரியும்!
நாடு மூடப்பட்டதன் பெறுபேறைக் காட்ட குறைந்தது இரு வாரங்களாவது எடுக்கும் என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
இதன்படி ,தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்திய பின் கொவிட் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் குறையாது என யாரும் கவலைப்படவோ அல்லது மனநிலை பாதிக்கப்படவோ கூடாது என பேராசிரியர் தெரிவித்தார்.
மேலும் ,ஊரடங்கு காலத்தின் போது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற நகர்வுகளைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.