மேலும் 194 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 7560 ஆக அதிகரிப்பு!


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் நேற்றைய தினத்தில் நடைபெற்றவை என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் இதுவரை நாட்டில் இடம்பெற்ற மொத்த கோவிட் இறப்பு எண்ணிக்கை 7560 ஆக உயர்வடைந்துள்ளது.