தலதா பெரஹரவில் பங்கேற்ற 76 கலைஞர்களுக்கு கொரோனா!
கண்டி தலதா பெரஹரவில் பங்கேற்ற 76 கலைஞர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரஹர நிறைவடைந்த 21 ஆம் திகதிக்குப் பிறகு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் குறித்த 76 கலைஞர்களும் கதிர்காம பெரஹரவில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.