கண்டி தலதா பெரஹெரவில் பலருக்கு கொரோனா!

கண்டி ஸ்ரீதலதா பெரஹெர வீதித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பெரஹெர விழாவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 16 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவில் விஷ்னு விகாரையைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கண்டி – சில்வெஸ்டர் கல்லூரியின் சார்பில் நடனக் கலைஞர்களாகப் பங்கேற்றவர்களில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *