தடுப்பூசி மூலம் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலை!
நாட்டில் கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவதினால் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விசேட வைத்தியர் லக்குமா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சரியான நேரத்தில் தீர்மானம் எடுக்காமையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.