இலங்கையில் கொரோனா மரணங்கள் 6 ஆயிரத்தை கடந்தது!
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (14) 161 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
83 ஆண்களும், 78 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.