சாரதி அனுமதிப்பத்திரம் செல்லும்படியாகும் காலம் நீடிப்பு!

சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் தொற்று பரவல் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 7 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *