இலங்கையில் மருத்துவர்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

பதுளை வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 16 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதான மருத்துவர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மூன்று மருத்துவர்கள், 6 தாதிகள், 7 கனிஷ்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இன்றைய தினம் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் 27 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பதுளை வைத்தியசாலையில் 116 கொரோனா நோயாளிகள் 5 விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிகளவான நோயாளிகள் இருக்கலாம் எனவும் பாலித ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *